12-ஆம் வகுப்பு தமிழ்
தேர்வு முடிந்தது!
உங்களது மதிப்பெண்:
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தமிழ் - மாதிரி வினாத்தாள் - 3
பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்
மாதிரி வினாத்தாள் - பொதுத்தேர்வு 2026
பகுதி - I
14 x 1 = 14அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
-
1. 'கிறித்தவக் கம்பர்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
-
2. 'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் யார்?
-
3. மாசி திங்களில் நிகழும் விழாவாக மயிலை பதிகம் சுட்டுவது எது?
-
4. "ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான்..." - இக்கவிதையில் பயின்றுவருவது எது?
-
5. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
-
6. ஆராய்ந்து சொல்கிறவர் யார்?
-
7. நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று எது?
-
8. 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று குறிப்பிட்டவர் யார்?
-
9. நகுலன் அவர்களின் இயற்பெயர் என்ன?
-
10. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது எது?
-
11. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் என்ன?
-
12. பொருத்துக:
அ) அன்பும் அறனும் 1) பண்புத்தொகை ஆ) நன்கலம் 2) ஆகுபெயர் இ) மறத்தல் 3) எண்ணும்மை ஈ) உலகு 4) தொழிற்பெயர் -
13. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது. -
14. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகளின் தொகுப்பு எது?
பகுதி - II
மதிப்பெண்கள்: 24- 15. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?
- 16. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
- 17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
- 18. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.
- 19. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நூல் பற்றி குறிப்பு வரைக?
- 20. புக்கில், தன்மனை - குறிப்பு வரைக.
- 21. பருவத்தே பயிர்செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
-
22. பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோவடிகள் சாதனாரிடம் முன் செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார் -
23. கீழ்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
அ) நேற்று முதல் அணை (நீர்) மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆ) முருகன் (வேகம்) சென்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை. - 24. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க: அ) கான் / காண் ஆ) ஊண் / ஊன்
- 25. எண் வகை மெய்ப்பாடுகள் யாவை?
- 26. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக:
அ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
ஆ) ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது. - 27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம். - 28. கலைச்சொல் தருக: அ) EMOTION ஆ) ANTHROPOLOGY
- 29. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக: அ) பெருந்தேர்
- 30. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக: அ) கலங்கி ஆ) பொலிந்தான்
பகுதி - III
மதிப்பெண்கள்: 24- 31. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
- 32. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
- 33. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
- 34. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
- 35. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
- 36. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
- 37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
- 38. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க.
-
39. அ) “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் பணையைச் சுடும்." - இக்குறளில் வரும் அணியை விளக்குக.
அல்லதுஆ) உவமை அணியை விளக்கு.
-
40. அ) பொதுவியல் திணையை விளக்குக.
அல்லதுஆ) பொருண்மொழிக் காஞ்சித் துறையை விளக்குக.
-
41. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.
சங்க இலக்கியம் (ஈராயிரம் ஆண்டுகள் பழமையுடையது):
• எட்டுத்தொகை: அகம் (நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை), புறம் (பதிற்றுப்பத்து, புறநானூறு), அகம்+புறம் (பரிபாடல்)
• பத்துப்பாட்டு: அகம் (குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை), புறம் (மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை) - 42. மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் ஒன்றினை எழுதுக.
-
43. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:
அ) எறும்பு ஊறக் கல்லும் தேயும்.அல்லதுஆ) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
குறிப்பு (செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா): சொற்றொடர்ப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) கோவலன் மதுரைக்குச் சென்றது. ஆ) பறவைகள் நெல்மணிகளை வேகமா கொத்தி தின்றது.
இ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது. ஈ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.
பகுதி - IV
3 x 6 = 18அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை தருக.
-
44. அ) “சினத்தைக் காத்தல்” வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
அல்லதுஆ) நாட்டிய அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி எழுதுக.
-
45. அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
அல்லதுஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் கருத்தை கட்டுரையாக்குக.
-
46. அ) சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துக்களைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
அல்லதுஆ) கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேய பண்புகளை விளக்குக.
பகுதி - V
4 + 2 = 647. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.
- அ) ‘குழல்வழி...’ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
- ஆ) 'சினம்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்
பொதுத்தேர்வு - 2026 | மாதிரி வினாத்தாள் - 1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக
1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
2. தமிழில் திணைப்பாகுபாடு ____________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
3. “நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
4. வையகம் வானகமும் ஆற்றலறிது - எதற்கு?
5. குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
6. கல்வியை நிலைக்களன்களாகக் கொண்ட மெய்ப்பாடு:
7. கண்ணாடியாகும் கண்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:
8. திண்ணியர் என்பதன் பொருள்:
9. “வாளால் அறுத்துச் சுடினும்..” - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது:
10. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர்:
11. 'சாபவிமோசனம் ', 'அகலிகை ' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்:
12. பிழையான தொடரைக் கண்டறிக:
13. உத்தம சோழன் நடத்தி வரும் திங்களிதழ்:
14. 14 நரம்புகளைக் கொண்ட யாழ்:
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.
அ) புதுப்பெயல்
( அல்லது )
ஆ) ஒருமையுடன்
அ) களைந்து
( அல்லது )
ஆ) விம்முகின்ற
அ) அலை, அளை, அழை
( அல்லது )
ஆ) தலை, தளை, தழை
அ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
ஆ) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
அ) வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
அ) ஆற அமர
ஆ) ஆணி அடித்தாற் போல
அ) SOUND EFFECT
ஆ) HABITAT
அ) உயர்ந்தோர்
ஆ) ஒரீஇ
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
A) LEARNING IS A TREASURE THAT WILL FOLLOW IT'S OWNER EVERYWHERE.
B) A NEW LANGUAGE IS A NEW LIFE.
C) IF YOU WANT PEOPLE TO UNDERSTAND YOU, SPEAK THEIR LANGUAGE.
D) OLD IS GOLD.
அ) ஆனைக்கும் அடி சறுக்கும்
( அல்லது )
ஆ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக:
- மொழி வரலாறு (மு. வரதராசனார்)
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக
அறைப்பாடத் தேர்வு - 2
12-ஆம் வகுப்பு | பொதுத் தமிழ்
பகுதி - I
| பிரிவு அ | பிரிவு ஆ |
|---|---|
| அ) அறம் | 1) கர்ணன் |
| ஆ) வலிமை | 2) மனுநீதிச்சோழன் |
| இ) நீதி | 3) பீமன் |
| ஈ) வள்ளல் | 4) தருமன் |
பகுதி - II
பகுதி - III
மேல்நிலை இரண்டாம் ஆண்டு - தமிழ்
காலாண்டுத் தேர்வு - முக்கிய வினாக்கள் 2026 - 27
https://tamilpuz.blogspot.com/
இயல் ஒன்று: தன்னேர் இலாத தமிழ்
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்:
"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்
ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் (று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!"
பா வகை: நேரிசை வெண்பா
அணி: பொருள் வேற்றுமை அணி
குறுவினா
1. விடியல், வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
3. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
4. "விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வதொன்றே உயிர்ப்பணியாக் கொண்டோன்” யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
சிறுவினா
1. 'ஏங்கொলিநீர் ஞாலத்து இருளகற்றும்'- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
2. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
நெடுவினா
1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
2. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
அணி விளக்கம்: பொருள் வேற்றுமை அணி
விளக்கம்: இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
கலைச் சொல் அறிவோம்
Anthropology - மானுடவியல்
Archaeology - தொல்லியல்
Fine Arts - கவின்கலைகள்
Field Study - கள ஆய்வு
Epigraphy - கல்வெட்டியல்
இயல் இரண்டு: நெடுநல்வாடை (நக்கீரர்)
"மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்."
பா வகை: நேரிசை ஆசிரியப்பா
திருக்குறள் - வாழ்வியல்
இல்வாழ்க்கை
1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (நிரல்நிறை அணி)
2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
செய்ந்நன்றி அறிதல்
1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
2. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
3. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
வெகுளாமை
1. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
2. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
குறுவினா
1. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
2. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
3. ஞாலத்தின் பெரியது எது?
4. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
சிறுவினா
1. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
2. சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
3. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
4. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
5. கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. "சினம்என்னும் சேர்ந்ததாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்".
நெடுவினா
1. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
2. புயல்தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரி செய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
3. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
திருக்குறள் அமைப்புக் குறிப்பு
அணி விளக்கங்கள்
1. நிரல் நிறை அணி (குறள் எண்-1):
விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி ஆகும்.
பொருத்தம்: அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை என்று கூறிவிட்டு அதற்கு இணையாகப் பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அது அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளுமாறு வருவதால், இது நிரல்நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.
2. ஏகதேச உருவக அணி:
விளக்கம்: ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
பொருத்தம்: இனத்தைத் தெப்பமாக உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகப்படுத்தவில்லை. எனவே இது ஏகதேச உருவக அணிக்குப் பொருத்தமாயிற்று.
கலைச் சொல் அறிவோம்
Museum - அருங்காட்சியகம்
Archive - ஆவணக்காப்பகம்
Hardware - வன்பொருள்
Green Belt Movement - பசுமை வளாக இயக்கம்
இயல் மூன்று: கம்பராமாயணம் (கம்பர்)
குகனோடு ஐவரான பாடம்:
"முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை." (6507)
பா வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இராமன் கூற்றுப் பாடல்:
"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" (1995)
பா வகை: கலி விருத்தம்
குறுவினா
1. புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
2. "துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது" என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
3. சங்க காலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
4. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி - இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
5. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
சிறுவினா
1. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
2. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
3. மணந்தகம் விளக்குக.
நெடுவினா
1. 'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
2. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
கலைச் சொல் அறிவோம்
Nuclear family - தனிக்குடும்பம்
Matriarchy - தாய்வழிச்சமூகம்
Culture - பண்பாடு
Habitat - வாழிடம்
விண்ணப்பங்கள் & படிவங்கள்
தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம்
அனுப்புநர்:
க.இனியன்,
63. குறிஞ்சி நகர் முதல் தெரு,
மதுரை.
பெறுநர்:
வசந்தம் பதிப்பகம்,
திரு.வி.க நகர்,
மதுரை.
பொருள்: தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பித்தல் சார்பு.
ஐயா,
தங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்குத் தகுதியான நபர்கள் தேவை என 04.01.2025 அன்று வெளியான நாளிதழ் விளம்பரம் மூலம் அறிந்தேன்.
நான் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தட்டச்சுத் தேர்வில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எனக்குப் பணியாற்ற வாய்ப்பளித்தால், செம்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவேன். எனது சான்றிதழ்களின் நகல்களைத் தங்களின் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.
இணைப்பு:
1. தன் விவரக் குறிப்பு.
2. கல்விச் சான்றிதழ்
3. தட்டச்சு தேர்ச்சிச் சான்றிதழ் (தமிழ், ஆங்கிலம்)
இடம்: மதுரை தேதி: 04.01.2025
இப்படிக்கு,
உண்மையுள்ள,
இனியன்